மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்

மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள தென் திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் தினந்தோறும் நடைபெற்று வந்தது.

பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, மலையப்ப சாமி அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்.



விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார்.

வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் திருத்தேரானது பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பக்தர்களின் "கோவிந்தா கோவிந்தா" கோஷங்கள் முழங்க திருத்தேர் கோவிலின் நான்கு மாட வீதிகளின் வழியாக வளம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...