கிணத்துக்கடவில் கொண்டைக்கடலை விதைக்கு 50 சதவீதம் மானியம்: வேளாண் துறை அறிவிப்பு

கிணத்துக்கடவு வட்டாரத்தில் கொண்டைக்கடலை சாகுபடிக்கு 50 சதவீதம் மானியத்தில் விதைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆண்டுதோறும் 100 ஹெக்டேர் அளவில் கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மழை பொழிவு குறைந்ததால் 30 ஹெக்டேர் வரை மட்டுமே கொண்டைக்கடலை சாகுபடி இருந்தது.

ஜக்கார்பாளையம், பொள்ளாச்சி வடக்கு பகுதிகளில் கொண்டைக்கடலை சாகுபடி அதிகப்படியாக இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் பட்சத்தில் 100 ஹெக்டேர் அளவை பூர்த்தி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியை துவங்கலாம் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

கொண்டைக்கடலை விதை, ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்ற திரவ உயிர் உரங்கள் மற்றும் பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்டங்கள் ஆகியவை 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு கொண்டைக்கடலை விதை வழங்க தேவையான அளவு வேளாண் துறை அலுவலகத்தில் இருப்பு உள்ளது.

விதைகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் அக்டோபர் 10 அன்று தெரிவித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...