திருப்பூரில் சிறுவர்கள் சைக்கிள்களுக்கு ஆயுத பூஜை: பெரியவர்களுக்கு இணையாக கொண்டாட்டம்

திருப்பூரில் சிறுவர்கள் தங்கள் சைக்கிள்களுக்கு ஆயுத பூஜை செய்து கொண்டாடினர். பெரியவர்களைப் போலவே சைக்கிள்களை சுத்தம் செய்து, அலங்கரித்து, வழிபாடு செய்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் சிறுவர்கள் பெரியவர்களுக்கு இணையாக ஆயுத பூஜையை கொண்டாடி உள்ளனர். தமிழகம் முழுவதும் தொழிலுக்கு சிறப்பு செய்யும் ஆயுத பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பெரியவர்கள் தங்கள் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேலை செய்யும் இடத்தை தூய்மை செய்து, இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரித்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் தங்களது வாகனங்களுக்கும் பூஜை செய்து வருகின்றனர்.

இதேபோல், பெரியவர்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் திருப்பூரில் சிறுவர்கள் தங்களது வாகனமான சைக்கிளுக்கு ஆயுத பூஜை செய்துள்ளனர்.



சைக்கிள்களை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூக்களை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.



பெரியவர்களுக்கு இணையாக சிறுவர்களும் திருப்பூரில் ஆயுத பூஜை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த புதுமையான கொண்டாட்டம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...