பேரூர் பெரியகுளத்தின் மிகைநீர் போக்கியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கோரிக்கை

கோவை மாவட்டத்தின் நொய்யல் திட்ட ஏரிகளில் ஒன்றான பேரூர் பெரியகுளத்தின் மிகைநீர் போக்கியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தின் நொய்யல் திட்ட ஏரிகளில் ஒன்றான பேரூர் பெரியகுளத்தின் மிகைநீர் போக்கியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கோரி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பேரூர் பெரியகுளத்திற்கு இரண்டு மிகை நீர்ப்போக்கிகள் உள்ளன. பேரூர் சிறுவாணி சாலை அருகில் 86 அடி அளவிலான மிகைநீர்ப்போக்கி அமைந்துள்ளது. இந்த மிகைநீர்ப்போக்கியின் உயர்ந்தபட்ச நீர் மட்டத்தை அடையும் முன்பே, அதன் அருகாமையில் உள்ள பேரூர் பேரூராட்சி கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு வழியாக குளத்தின் நீர் வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் காரணமாக, குளத்தின் நீர் தேங்கும் பரப்பளவு 1.072 சதுர கிலோமீட்டரிலிருந்து 9 அங்குலம் குறைந்துள்ளதாகவும், இதனால் 24 கோடி லிட்டர் நீர் தேங்கும் திறனை இழப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீர் வரத்து உள்ள காலத்திலேயே குளத்தின் கொள்ளளவு முழு மட்டத்திற்கு இருப்பதை உறுதி செய்யும்படியும், மிகைநீர் போக்கியின் அருகாமையிலுள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக குளத்து நீர் வெளியாவதை தடுக்க போர்க்கால நடவடிக்கையின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுமாறும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையானது மாவட்ட ஆட்சித்தலைவர், நீர் வள ஆதாரத்துறையின் செயற்பொறியாளர், மற்றும் நொய்யல் பாசன உபகோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...