திருப்பூரில் விஜயதசமி: 1000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்வு

திருப்பூரில் விஜயதசமியை முன்னிட்டு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் வித்யாரம்ப நிகழ்வு நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகளின் நாவில் 'ஓம்' எழுதப்பட்டு, அரிசியில் 'அ' எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 13-ம் ஆண்டு வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்வு நடைபெற்றது.



இந்த நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி துவங்கி, 10-ம் நாளான விஜயதசமி அன்று வித்யாரம்பம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், குழந்தைகளின் நாவில் தங்கவேல் கொண்டு 'ஓம்' எனும் வார்த்தை எழுதப்பட்டது. மேலும், பச்சரிசியில் 'அ', 'ஆ' என குழந்தைகளின் கை பிடித்து எழுதும் நிகழ்வும் நடைபெற்றது.

விஜயதசமி நாளில் தொடங்கப்படும் எந்தவொரு செயலும் சிறந்த வெற்றி தரும் என்பது நம்பிக்கை. அதன்படி, குழந்தைகளுக்கு கல்வி, கலைகள் போன்றவற்றை இந்நாளில் தொடங்குவது வழக்கம்.



வித்யாரம்பம் நிகழ்வில், குழந்தை தந்தை, தாத்தா அல்லது மாமாவின் மடியில் அமர வைக்கப்பட்டு, அரிசி பரப்பப்பட்ட தட்டில் குழந்தையின் கை பிடித்து 'அ' என்று எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது.



இந்த வித்யாரம்பம் நிகழ்வில் கலந்து கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு குழந்தைகளின் கல்வி வாழ்க்கையின் தொடக்கமாக கருதப்படுகிறது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...