மோசமான வானிலையால் துபாய் - கோழிக்கோடு விமானம் கோவையில் அவசர தரையிறக்கம்

துபாயில் இருந்து கோழிக்கோடு செல்லும் 'பிளை துபாய்' விமானம், கோழிக்கோட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


கோவை: துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு இன்று (அக்டோபர் 12) காலை சென்று கொண்டிருந்த 'பிளை துபாய்' நிறுவனத்தின் விமானம், மோசமான வானிலை காரணமாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, விமானம் அரை மணி நேரத்துக்கும் மேலாக காற்றில் சுற்றியது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

விமானம் இன்று அக்டோபர் 12 காலை 7.45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. வானிலை சீரடைந்த பின்னர் விமானம் கோழிக்கோடுக்கு புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...