கோவை கொடிசியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வசதியாக்க முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வசதி அளிக்க அக்டோபர் 15 அன்று கொடிசியாவில் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வசதி அளிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன. புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், நடைமுறை மூலதனத்திற்காகவும் இந்நிறுவனங்களுக்கு நிதி வசதி தேவைப்படுகிறது.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து கடன் வசதியாக்கல் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் கொடிசியா வர்த்தக வளாகத்தில் அமைந்துள்ள "D" அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த முகாம் தொழில் நிறுவனங்களுக்கு கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், அவர்களின் வளர்ச்சிக்கு உதவவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...