பொள்ளாச்சியில் போலீஸ் கண்காணிப்பாளர் தலைமையில் திடீர் சோதனை

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. குட்கா, போதை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. பான் மசாலா, குட்கா, போதை வஸ்துக்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காவலர் அறையில், கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகின்றனவா என்றும், காவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வருகிறார்களா என்றும் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கோப்புகளை ஆய்வு செய்தார்.



பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குட்கா, பான் மசாலா போன்றவை விற்பனை செய்யப்படுகின்றனவா என போலீசார் சோதனை மேற்கொண்டனர். கடை உரிமையாளர்களிடம் அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

நகராட்சி பகுதியில் வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா, அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்பதை போலீசார் சரிபார்த்தனர். ஏடிசி தியேட்டர் பகுதியில் கடைகளின் முன்பு மது அருந்திக் கொண்டிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தி எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த திடீர் சோதனையில் காவல் ஆய்வாளர்கள் ரத்தினகுமார், ராஜேஸ்வரி மற்றும் பல உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த திடீர் ஆய்வு பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...