கோவை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா

கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று பாரம்பரிய கலைகளை நிகழ்த்தினர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் திருவேங்கிடசாமி சாலையில் உள்ள வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் (Sharathkala Navarathiri Mahotsavam) திருவீதி உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது.



இந்நிகழ்வை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



திருவீதி உலாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டனர்.



அவர்கள் கொம்பு, நையாண்டி மேளம், செண்டை மேளம், காவடியாட்டம், தெய்யம், காளி ஆட்டம், திரையாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை நிகழ்த்திக்காட்டினர்.



இந்த ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி திருவேங்கடசாமி சாலை, தடாகம் சாலை, பெரியசாமி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



மேலும், பல்வேறு வேடம் அணிந்து கொண்டு நடனம் ஆடியபடி ஊர்வலமாகச் சென்ற கலைஞர்களை அனைவரும் மிகுந்த வியப்புடன் பார்த்து ரசித்தனர். ஊர்வலம் சென்ற பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் கோவிலில் நடைபெற்ற சரத்கால நவராத்திரி மஹோத்ஸவம் திருவீதி உலா, கலாச்சாரம் மற்றும் ஆன்மிகத்தை ஒன்றிணைத்து கொண்டாடிய ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...