கோவையில் கனமழை: கணுவாய் தடுப்பணை நிரம்பி வழிந்தோடும் நீர் - போக்குவரத்து பாதிப்பு

கோவையில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் கணுவாய் தடுப்பணை நிரம்பி வழிந்தோடுகிறது. கணுவாய்-பன்னீர்மடை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.


Coimbatore: கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கணுவாய் பகுதியில் உள்ள தடுப்பணை நிறைந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகம் மற்றும் தென் மேற்கு வங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.



கோவையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை கணுவாய் பகுதியில் உள்ள தடுப்பணை முழுவதும் நிரம்பி மழை நீர் பெருக்கெடுத்து சங்கணூர் பள்ளம் வழியாக சென்றது. தடுப்பணையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கணுவாய்-பன்னீர்மடை இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



பொதுமக்கள் இப்பகுதியில் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...