உடுமலை அருகே ஆண் குழந்தையை கடத்திய பெண் சேலத்தில் கைது

உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் 2 வயது ஆண் குழந்தையை காரில் கடத்திச் சென்ற பெண், சேலத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் ஆண் குழந்தையை காரில் கடத்தி சேலத்திற்கு தப்பியோடிய பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் மங்களாபுரத்தைச் சேர்ந்த அமுதா (30) என்பவர் தனது 2 வயது மகன் நிகில் கேசவனுடன் வேலை தேடி சேலம் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு கன்னங்குறிச்சியைச் சேர்ந்த அமுதா (39) மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த இந்திராணி (43) என்பவருடன் அறிமுகமானார்.

இந்திராணி, அமுதாவை அழைத்துக் கொண்டு உடுமலை பகுதிக்கு வந்தார். முக்கோணம் அருகே அமுதா இயற்கை உபாதைக்குச் சென்றபோது, இந்திராணி குழந்தையை கடத்திக் கொண்டு சென்றுவிட்டார். அமுதா உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக செயல்பட்ட உடுமலை போலீசார், சேலம் அரசு மருத்துவமனை அருகே இருந்த இந்திராணியை கைது செய்து உடுமலைக்கு அழைத்து வந்தனர். குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இச்சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கடத்திய இந்திராணியிடம் உடுமலை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...