கோவை: அபார்ட்மெண்ட் குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலப்பு - குடியிருப்பாளர்கள் அவதி

கோவை கள்ளிமடையில் உள்ள அபார்ட்மெண்ட்டின் குடிநீர் தொட்டியில் மாநகராட்சி கழிவுநீர் கலந்ததால் குடியிருப்பாளர்கள் பாதிப்பு. அருகிலுள்ள வில்லா நிர்வாகத்தின் செயல்பாடு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட கள்ளிமடையில் உள்ள ஆகாஷ் வில்லா மற்றும் அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அபார்ட்மெண்ட்டின் குடிநீர் தொட்டியில் மாநகராட்சி கழிவுநீர் கலந்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வில்லா மற்றும் அபார்ட்மெண்ட்டுக்கு இடையே பொதுவான கழிவுநீர் குழாய் உள்ளது. வில்லா சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.



நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகராட்சி கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வில்லா அசோசியேஷன் நிர்வாகிகள் கழிவுநீர் செல்லும் வழியை அடைத்துவிட்டனர். இதனால் மழைநீர், கழிவுநீர் அனைத்தும் அபார்ட்மெண்ட்டுக்குள் புகுந்து, 4,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியில் கலந்தது.



இதனால் குடிநீர் மாசுபட்டுள்ளதாக அபார்ட்மெண்ட் அசோசியேஷன் தலைவர் கண்ணன் தெரிவித்தார். குடிப்பதற்கு வெளியிலிருந்து தண்ணீர் கேன்கள் வாங்கி குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வாந்தி வருவதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணைக்கு வந்தனர். ஆனால் அவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த பிரச்சனைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற அச்சத்தில் குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...