அன்னூர் அருகே தனியார் லாட்ஜில் ஆன்லைன் விபச்சாரம்: மேலாளர் உள்பட இருவர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கீரநத்தம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் ஆன்லைன் மூலம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக விடுதி மேலாளர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கீரநத்தம் பகுதியில் இயங்கி வந்த தனியார் தங்கும் விடுதியில் ஆன்லைன் மூலம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக விடுதி மேலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநத்தம் பகுதியில் 'வோன்டர் பாரடைஸ்' என்ற பெயரில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் ஓயோ செயலி மூலம் அறை புக் செய்து வெளியூரிலிருந்து வந்த ஒரு வாடிக்கையாளரிடம், விடுதி மேலாளர் சரோஜ் குமார் மற்றும் ஊழியர் வர்க்கீஸ் ஆகியோர் ஆன்லைன் மூலம் பெண்களை புக் செய்து தருவதாகக் கூறி, விபச்சாரத்திற்கு தூண்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விடுதி மேலாளர் சரோஜ் குமார் மற்றும் ஊழியர் வர்கீஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், குறிப்பிட்ட விடுதிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஐ.டி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் அதிகம் உள்ள சரவணம்பட்டி, கீரநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விபச்சாரம் அதிக அளவில் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...