அன்னூர் அருகே அறுந்த மின் கம்பி: பொதுமக்கள் புகார் மீது மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்

அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கரியாம்பாளையம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியான ஒன்னக்கரசம்பாளையத்தில், சாலையூர் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில், மின் வழித்தடத்தில் உள்ள ஒரு கம்பி 90 சதவீதம் அறுந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், அந்த பகுதி மக்கள் பொகலூர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், மின்வாரிய அதிகாரிகளோ இதனை பொருட்படுத்தாமல், அந்த மின் கம்பி அறுந்துள்ள இடத்தில் உள்ள விவசாய தோட்ட உரிமையாளரே தனது சொந்த செலவில் சரி செய்து கொள்ள வேண்டும் என கூறியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், அரசுத்துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய சூழலில், மின்வாரிய அதிகாரிகளின் இந்த அலட்சியம் மனித உயிர்களை பறிக்கும் முன் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த ஊர் மக்கள் வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துணை முதல்வர் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறும் நிலையில், மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...