திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மழைக்கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி: தீயணைப்பு வீரர்கள் அசத்தல்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு வீரர்கள் பல்வேறு பாதுகாப்பு முறைகளை விளக்கினர்.


Coimbatore: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழைக்கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பில் பருவமழை பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.



மாவட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் பங்கேற்றனர். மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்தால் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து விளக்கமளித்து காண்பித்தனர்.

மேலும், நீரில் மூழ்கியவரை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், விபத்து நேரங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விரிவான விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி அலுவலர்கள் இளஞ்செழியன், வீரராஜ் மற்றும் நிலை அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...