கோவை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை கடத்த முயற்சி: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் துண்டு சீட்டு கண்டெடுக்கப்பட்டது. விரிவான சோதனைக்குப் பின் வதந்தி என உறுதி செய்யப்பட்டு, விமானம் தாமதமாக புறப்பட்டது.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் துண்டு சீட்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அக்டோபர் 13 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் 169 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமானத்துக்குள் கிடந்த ஒரு துண்டு சீட்டில் விமானத்தை கடத்தப் போவதாக எழுதப்பட்டிருந்தது.

உடனடியாக இண்டிகோ ஊழியர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்தனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆகியோரும் அடங்குவர்.

பின்னர் அனைத்து பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. விமானமும் முழுவதுமாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விரிவான சோதனைக்குப் பின்னர், மிரட்டல் துண்டுச் சீட்டு வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஒன்றரை மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணியளவில் விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...