இஸ்லாமியர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டியது எங்கள் கடமை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கோவை கோட்டைமேடு பகுதியில் மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார். இஸ்லாமியர்களின் பங்களிப்பை பாராட்டினார்.


Coimbatore: கோவை கோட்டைமேடு பகுதியில் இயங்கி வரும் மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் தலைவர் இனாயத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். மேலும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் Kranthi Kumar Pati, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது உரையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இந்தப் பள்ளியை தரம் உயர்த்தி இருப்பதாகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கல்வியை தரத்தோடு வழங்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர் என்றும் கூறினார். அதன்படி இந்தப் பள்ளி நிர்வாகம் தரமான கல்வியை தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.



அமைச்சர் மேலும் பேசுகையில், "நாடு விடுதலை பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கிக் கொண்டிருப்பவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கு என்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டியது எங்களது கடமை" என்று குறிப்பிட்டார். மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், பெற்றவர்களுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் கற்பிப்பதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.



ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத், சிறப்பான கல்வி நிறுவனத்தை உருவாக்கி இருப்பதாக பாராட்டிய அமைச்சர், ஜமாத்தின் கீழ் கல்லூரி வரவேண்டும் என்றும், அதற்காக ஒரு தோழனாக இருந்து முழு முயற்சியோடு செயல்படுவேன் என்று உறுதி அளித்தார்.

Newsletter

கரூர் 41 உயிரிழந்தோருக்கு அரசு வேலை: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...