கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஆளுநரிடம் மனு அளித்தார்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் என்ற மாணவர், பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்தார்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், பல்கலைக்கழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற்றபோது மனு அளித்தார். இச்செயல் விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.



பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரகாஷ், "பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மனு கொடுத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் புகார் கொடுத்துள்ளேன்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழிநடத்தும் பேராசிரியர்கள், அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களது குழந்தைகளை பார்ப்பதற்கும், பாத்திரம் கழுவவும், வங்கி வேலைக்கும் ஆய்வு மாணவர்களை பயன்படுத்துவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளேன்," என்றார்.

பிரகாஷ் தனது புகாரில், ஆதிதிராவிடர் விடுதிகள் பற்றியும், ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பிற்கான அதிக செலவு, விடுதி பராமரிப்பு நிதி முறைகேடு, விளையாட்டு மைதானங்களின் பயன்பாடு தடை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.

"கடந்த 5 வருடங்களாக விளையாட்டு தினம் நடத்தாமல் பணத்தை மட்டும் வசூலித்து வருகின்றனர். இந்த அனைத்து பிரச்சினைகளையும் கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்," என பிரகாஷ் தெரிவித்தார்.

Newsletter

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...