குறிச்சி பகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாத மாநகராட்சியினைக் கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அனைத்து கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக குறிச்சி பகுதி செயலாளர் குறிச்சி பிரபாகரன் தலைமை தாங்கினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது காலி குடங்களுடன் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர். கோவை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாகவும், ஆனால் குறிச்சி பகுதியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். 

மேலும், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாவதாகவும், மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் மக்களை ஒருமுறை கூட பார்க்க வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உட்பட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...