கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் மழைநீர் வடிகால், சாலை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு எம்எல்ஏ PRG. அருண்குமார் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் கலந்து கொண்டார்.



பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கஸ்தூரிநாய்க்கன்பாளையம் 1-வது வார்டு மருதமலை அடிவாரம் சிவசாமி விபூதி ஸ்டோர்ஸ் அருகில் ரூ.8,20,000 மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.



இதேபோல், கஸ்தூரிநாய்க்கன்பாளையம் வார்டு 11-ல் ரூ.6,70,000 மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.



நச்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோமையனூரில் ரூ.14,00,000 மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடத்தப்பட்டது.



மேலும், பன்னீர்மடை ஊராட்சி, தாலியூர் N.A.M நகர் பகுதியில் ரூ.9,95,000 மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





இதனிடையே, பன்னீர்மடை ஊராட்சி, கஸ்தூரி நாயக்கன் புதூர் பகுதியில் நேற்று பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை எம்எல்ஏ PRG. அருண்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த ஆய்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...