இலங்கையை சேர்ந்த கோவை டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினர் கைது


ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கையை சேர்ந்த நிறுவனமான டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அரசு 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதற்கு உலக நாடுகள், ஐக்கிய நாடுகளின் சபை உட்பட பல அமைப்புகள் இலங்கை அரசுக்கு கண்டணம் தெரிவித்திருந்தன.

ஆனால், இலங்கை அரசு மீது எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்காமல் ஐ.நா. சபை காலம் தாழ்த்தி வந்தது. இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காமல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனமான கோவையில் செயல்பட்டு வரும் டாம்ரோ பர்னிச்சர் கடையை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை நிறுவனங்களை இந்தியாவிலிருந்து அகற்றப்போவதாகவும் கோஷங்களை எழுப்பியபடி பதாககைகளை கைகளில் ஏந்தி தமிழர் விடியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...