மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு; அதிகாரிகள் சீரமைப்பு பணியில் தீவிரம்

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு அருகே ராட்சத மரம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகரில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும், இரவு நேரங்களில் தொடர்ந்து மழையும் பெய்து வருகிறது.



இந்த சூழ்நிலையில், மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு முதல் கொண்டை ஊசி வளைவு, இரண்டாவது கொண்டை ஊசி வளைவு இடையே திடீரென சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.



இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டன.



இது குறித்த தகவல் கிடைத்ததும், மேட்டுப்பாளையம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் பவர் சா மூலம் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி அகற்றினர். வெட்டிய மரத்துண்டுகள் ஜேசிபி வாகனம் மூலம் சாலையோரத்துக்கு அகற்றப்பட்டன.



கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல், சக்தி வாய்ந்த விளக்குகளின் உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலையில் சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...