திருப்பூரில் சிலிண்டர் கசிவு: பள்ளி மாணவிக்கு 75 சதவீதம் தீக்காயம்

திருப்பூர் வஞ்சிபாளையத்தில் சிலிண்டர் கசிவால் தீ விபத்து. 6ஆம் வகுப்பு மாணவி கௌசல்யா (11) 75 சதவீதம் தீக்காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி. தந்தைக்கும் காயம்.


திருப்பூர்: திருப்பூர் இடுவாய் அருகே வஞ்சிபாளையம் பகுதியில் இன்று காலை சிலிண்டர் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 6ஆம் வகுப்பு மாணவி கௌசல்யா (11) மற்றும் அவரது தந்தை ஜீவா (44) தீக்காயமடைந்தனர்.

ஜீவா தனது மனைவி மகாலட்சுமி (36) மற்றும் இரண்டு மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது மகள்கள் ஸ்ரீமதி (13) மற்றும் கௌசல்யா (11) இடுவம்பாளையம் அரசு பள்ளியில் முறையே 8 மற்றும் 6ஆம் வகுப்பு பயின்று வந்தனர்.



காலை வேளையில் வீட்டில் சிலிண்டர் மாற்றும்போது, வாஷர் வழியாக எரிவாயு கசிந்து தீப்பற்றியது. மகாலட்சுமி தனது மகள் ஸ்ரீமதியுடன் வெளியேறினார். ஜீவா உள்ளே சென்று கௌசல்யாவை மீட்டார். இதில் கௌசல்யா மற்றும் ஜீவா தீக்காயமடைந்தனர்.

இருவரும் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜீவாவிற்கு கைகளில் மட்டும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கௌசல்யாவிற்கு உடல் முழுவதும் 75% தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

கௌசல்யாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீரபாண்டி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...