கோவை நீர்நிலைகளில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவையில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் நீர்நிலைகளில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மழைக்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் முக்கியமானவை:

1. ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் செல்பி எடுப்பது, குளிப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

2. கனமழையின் போது இரயில்வே சுரங்கப்பாதை, தரைப்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியிருக்கும் போது அப்பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

3. மழையினால் வீடுகளுக்கு அருகில் மரங்கள், கட்டிடங்கள் விழும் அபாயம் இருந்தால், உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு அல்லது மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய உயிர் மற்றும் பொருள் சேதங்களைத் தவிர்க்க முடியும் என மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...