நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நல்லம்மன் கோவிலை சூழ்ந்த நீர், அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது

வடகிழக்கு பருவமழையால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நல்லம்மன் தடுப்பணை கோவிலையும் அணைப்பாளையம் தரைப்பாலத்தையும் மூழ்கடித்தது. பொதுமக்கள் எச்சரிக்கை.


திருப்பூர்: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள சூழலில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.



இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



குறிப்பாக திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணை கோவிலை நொய்யல் ஆற்று நீர் சூழ்ந்து கோவிலுக்கு செல்லும் பாதையை மூழ்கடித்து சென்று கொண்டிருக்கிறது.



காரணமாக, பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆண்டிபாளையம் அருகே அமைந்துள்ள அணைப்பாளையம் தரைப்பாலத்தையும் மூழ்கடித்து நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் இருகரைகளை தொட்டு சென்று கொண்டிருக்கிறது. தரைப் பாலத்தை யாரும் வாகன ஓட்டிகள் கடந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நீர்நிலைகள் அருகே செல்வதை தவிர்க்குமாறும், அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...