கோவை மாநகராட்சியில் ரூ.3 முதல் 12 லட்சம் வரை வருவாய் கொண்டோருக்கு வட்டி மானியத்தில் வங்கிக் கடன்


கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டு பகுதிகளில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருவாய் கொண்ட பிரிவினருக்கு வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் இதுகுறித்து தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டு பகுதிகளில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி நகரப்பகுதிகளில் வசிக்கும் ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை உடைய நலிவடைந்த மக்களுக்கு 323 சதுர அடி உட்பரப்பு கொண்ட வீடுகட்ட ரூ.3 லட்சம் வரையும், ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை உள்ள குறைந்த வருவாய் கொண்ட பிரிவினருக்கு 646 சதுர அடி உட்பரப்பு கொண்ட வீடுகட்டுவதற்கு ரூ.6 லட்சம் 20 ஆண்டு வரை 4 சதவிகித வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியும், ஆண்டு வருமானம் 6 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருவாய் கொண்ட பிரிவினருக்கு வீடுகட்டுவதற்கு ரூ.12 லட்சம் வரை 20 ஆண்டு வரை 3 சதவிகித வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியும் அளிக்கப்படும்.

மேலும், ஏற்கெனவே உள்ள வீட்டின் விரிவாக்கத்திற்கும், கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை வாங்குவதற்கும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும்.

மேலும், கணக்கெடுப்பில் விடுபட்ட பயனாளிகள் உடனடியாக மாநகராட்சி மைய அலுவல தகவல் மையத்தை அனுகி, கொடுக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பயனாளிகள் விபரங்களுக்கு 94437 04002 என்ற எண்ணை அழைக்கவும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...