கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் குழந்தை தொழிலாளர், பாலியல் தொல்லை, திருமணம் மற்றும் கடத்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. மாணவர்களின் படைப்புகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டன.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. குழந்தை தொழிலாளர், குழந்தை பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் மற்றும் குழந்தை கடத்தல் ஆகிய தலைப்புகளில் கல்லூரி மாணவர்கள் தயாரித்த குறும்படங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டன.

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் பாவை பவுண்டேஷன் (பெண் குழந்தைகள் இல்லம்) ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட குறும்பட போட்டியில், சமூகப் பணித்துறை மற்றும் விசுவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் தங்கள் கற்பனை திறனைப் பயன்படுத்தி இந்த குறும்படங்களை உருவாக்கியிருந்தனர்.

குறும்பட திரையிடல் விழாவை காவல்துறை சார்பு ஆணையாளர் டாக்டர் மணிகண்டன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் டாக்டர் வாசுகி தலைமையுரையாற்றினார். கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்சா, குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.



நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் சாம் சூர்யா, தற்போதைய சமூக பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு குறும்படங்களை உருவாக்கிய மாணவர்களின் முயற்சியை பாராட்டினார். இது போன்ற குறும்படங்களை வெளியிடுவதன் மூலம் சமூகத்தில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகளை தடுப்பதில் குறும்பட விழிப்புணர்வு மட்டுமல்லாமல், பெண் குழந்தைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியம் என்று நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. இந்த முயற்சி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...