திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள காவுத்தம்பாளையம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும், உயர் மின் கோபுரம் திட்டத்தை சாலை ஓரம் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி முழுவதும் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் வரை 765 கிலோவாட் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை சாலை ஓரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



காவுத்தம்பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் செய்து வருவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழர்களின் வரலாறு, பண்பாடு அழிவதற்கு மாவட்ட நிர்வாகம் துணை போகிறது. விவசாயிகளின் எதிர்ப்பை மீறி துணை மின் நிலையத்தையும் அமைக்க விடமாட்டோம், உயர்மின் கோபுரத்தையும் அமைக்க விட மாட்டோம். அதற்காக சிறை செல்லவும் தயார்," என்று தெரிவித்தனர்.

மேலும், "இந்தப் பகுதிகள் முழுவதும் அகழாய்வு ஆராய்ச்சி மேற்கொண்டால் பல வரலாற்றுச் செய்திகள் குறியீடுகளை மீட்டெடுக்க முடியும்," என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...