கோவையில் பாதுகாப்பு நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் நகை, பணம் கொள்ளை

கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் அருகே அமைந்துள்ளது பார்ஸன் அடுக்குமாடி குடியிருப்பு. முக்கிய பிரமுகர்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் தனியார் பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பார்ஸன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து திருப்பூரில் பனியன் ஏற்றுமதி செய்துவரும் சிவானந்த் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வெளிமாநிலத்திற்கு சென்றுவிட்டு விட்டிற்கு திரும்பிவந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 28 பவுன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மெற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்புகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்றுள்ள இந்த திருட்டு அந்தக் குடியிருப்பில் வசிப்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...