கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தினமும் 693 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவையில் சமீப நாட்களாக வெயில் மிகுதியாக உள்ளது. இதனால் மாநகராட்சி சார்பில் நகரில் அமைத்துள்ள சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்தி கணிசமாக அதிகரித்து வருகிறது.




மின் உற்பத்தியை பெருக்கவும், அதனால் ஏற்படும் மின் கட்டண செலவை ஈடுகட்டவும் சோலார் பேனல் திட்டத்தை கோவை மாநகராட்சி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




சுமார் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் உருவாக்கपட்ட இந்த திட்டம் 140 முதல் 154 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் தினமும் 693 யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும். இது தவிர உக்கடம் புல்லுக்காட்டில் 3.6 மெகா வாட் திறன் கொண்ட சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது.




இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சியின் மின்சார தேவையை பூர்த்தி செய்து, மின் செலவை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக வெயில் காலங்களில் சூரிய ஒளி அதிகமாக கிடைப்பதால், சோலார் பேனல்கள் மூலமாக அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்" என்றனர்.




கோடை காலங்களில் ஒட்டு மொத்த உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சமீப காலமாக கோவையில் வெயில் அதிகரித்து வருவதால் மின்சார உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த சூழல் சார்ந்த திட்டம் மாநகராட்சியின் மின் கட்டண செலவை கணிசமாக குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...