கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தினமும் 693 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Coimbatore: கோவையில் சமீப நாட்களாக வெயில் மிகுதியாக உள்ளது. இதனால் மாநகராட்சி சார்பில் நகரில் அமைத்துள்ள சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்தி கணிசமாக அதிகரித்து வருகிறது.




மின் உற்பத்தியை பெருக்கவும், அதனால் ஏற்படும் மின் கட்டண செலவை ஈடுகட்டவும் சோலார் பேனல் திட்டத்தை கோவை மாநகராட்சி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




சுமார் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் உருவாக்கपட்ட இந்த திட்டம் 140 முதல் 154 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் தினமும் 693 யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும். இது தவிர உக்கடம் புல்லுக்காட்டில் 3.6 மெகா வாட் திறன் கொண்ட சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது.




இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சியின் மின்சார தேவையை பூர்த்தி செய்து, மின் செலவை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக வெயில் காலங்களில் சூரிய ஒளி அதிகமாக கிடைப்பதால், சோலார் பேனல்கள் மூலமாக அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்" என்றனர்.




கோடை காலங்களில் ஒட்டு மொத்த உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சமீப காலமாக கோவையில் வெயில் அதிகரித்து வருவதால் மின்சார உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த சூழல் சார்ந்த திட்டம் மாநகராட்சியின் மின் கட்டண செலவை கணிசமாக குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...