கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் Pawan Kumar Giriyappanar தலைமையில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பயிற்சி கூட்டம் இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று (25.03.2025) ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்பவன் குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர்சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 115-மேட்டுப்பாளையம், 116-சூலூர், 117-கவுண்டம்பாளையம், 118-கோயம்புத்தூர் வடக்கு, 119-தொண்டாமுத்தூர், 120-கோயமுத்தூர் தெற்கு, 121-சிங்காநல்லூர், 122-கிணத்துக்கடவு, 123-பொள்ளாச்சி மற்றும் 124-வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 366 எண்ணிக்கையிலான மண்டல அலுவலர்கள் மற்றும் 366 எண்ணிக்கையிலான உதவி மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவது தொடர்பாகவும், வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வதும் குறித்தும் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றிட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் Ramakrishna Samy IAS, துணை ஆணையர் (கலால்) Dr. P Murugesan, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) Madhura, துணை ஆட்சியர் (பயிற்சி) Hari Priyanka, வட்டாட்சியர் (தேர்தல்) Thanikaivel மற்றும் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...