கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Coimbatore:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து, ஈச்சனாரியில் அக்கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, தொண்டர் ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு வழங்கப்படாததால் தெற்கு மாவட்ட பாஜகவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மறுபரிசீலனை செய்து தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தொகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அந்த தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை 27 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், முந்தைய தேர்தலில் போட்டியிட்ட சில தொகுதிகளை மட்டுமே மீண்டும் பெற்றுள்ளது.

மேலும், கடந்த முறை வெற்றி பெற்ற சில முக்கிய தொகுதிகளில் இம்முறை பாஜக போட்டியிடாததும் கட்சியினரிடையே பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஈச்சனாரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...