கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Coimbatore:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து, ஈச்சனாரியில் அக்கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, தொண்டர் ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு வழங்கப்படாததால் தெற்கு மாவட்ட பாஜகவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மறுபரிசீலனை செய்து தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தொகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அந்த தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை 27 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், முந்தைய தேர்தலில் போட்டியிட்ட சில தொகுதிகளை மட்டுமே மீண்டும் பெற்றுள்ளது.

மேலும், கடந்த முறை வெற்றி பெற்ற சில முக்கிய தொகுதிகளில் இம்முறை பாஜக போட்டியிடாததும் கட்சியினரிடையே பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஈச்சனாரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...