கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடினோ வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்த நோய் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Coimbatore: கோவையில் 'Madras Eye' எனப்படும் கண் நோய் பாதிப்பு வேகமாக பரவி வருவதால், மருத்துவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




கண் விழியையும் இமையையும் இணைக்கும் சவ்வு படலத்தில் அடினோ வைரஸ் தொற்றால் 'Madras Eye' நோய் ஏற்படுகிறது. கண்கள் சிவப்படைதல், வலி, அதிகமாக நீர் கசிதல், இமைகள் ஒட்டிக் கொள்வது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.




ஆரம்ப நிலையில், இந்த தொற்று கண்ணின் வெள்ளை படலத்தை மட்டும் பாதிக்கும். உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெறாவிட்டால், கருவிழியில் புண் ஏற்பட்டு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு வாரம் வரை காய்ச்சல், தொண்டை வலி, காது வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். வெயில் கொளுத்த துவங்கிவிட்டதால் இந்த நோய் பரவுவது அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.




கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 10 பேர் 'Madras Eye' நோய்க்கான சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் அலெர்ட்டாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.




கண் மருத்துவர் சரவணன் இதுகுறித்து கூறுகையில், "'Madras Eye' பாதித்தவரின் கண்களை நேராக பார்ப்பதால் இந்த நோய் பரவாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலமாக மட்டுமே வைரஸ் பரவும். ஒருவருக்கு வழங்கிய சொட்டு மருந்தை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஒரு கண் பாதித்திருந்தால், அடுத்த கண்ணுக்கும் சேர்த்து அதே சொட்டு மருந்தை ஊற்றக் கூடாது. 'வருமுன் காப்போம்' என்ற கோட்பாடு 'Madras Eye' நோய்க்கு பொருந்தாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார்.




மருத்துவர்கள் மக்களுக்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளனர். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும், கண்களை கைகளால் தேய்க்க வேண்டாம், தனிப்பட்ட பொருட்களான துண்டு, கைக்குட்டை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...