கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங்கம் 30.03.2026 அன்று நடைபெற்று சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை குறித்து வலியுறுத்தப்பட்டது.


Coimbatore:

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் IQAC மற்றும் ஒளிரும் கோவை தன்னார்வ அமைப்பு இணைந்து “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் 30.03.2026 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், 50 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவையை வெளியிட்டார்.

அவர் உரையாற்றும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர தூய்மை மிக முக்கியமானவை என்றும், கோவையை ஆரோக்கியமான நகரமாக மாற்ற அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும், தூய்மை குறித்து சிறுவயதிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்வில் முனைவர் சிஏ கைலாஷ் குமார் மற்றும் தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த கருத்தரங்கிற்காக மாநிலம் முழுவதும் இருந்து 50 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கட்டுரைகள் வல்லுநர் குழுவின் முன்னிலையில் வழங்கப்பட்டன.

அவற்றில் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனர் ஏ.எம்.சம்சு அலி பரிசுகளை வழங்கினார்.

முதல் பரிசு ரூ.15,000 முனைவர் பி.நரசிம்மன், இரண்டாம் பரிசு ரூ.10,000 மாணவி வி.சண்முகபிரியா, மூன்றாம் பரிசு ரூ.5,000 மாணவிகள் எம்.மோகனா மற்றும் ஆர்.ஸ்ரீ லஷ்மி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வை IQAC ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஒளிரும் கோவை அமைப்பினர் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...