கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்றும் மும்பைக்கு 4 விமானங்கள் இயங்குகின்றன. சர்வதேச இணைப்புகள், வசதியான இருக்கைகள் மற்றும் சூடான உணவு வசதிகளை காரணம் காட்டி சென்னை, பூனே உள்ளிட்ட நகரங்களுக்கு சேவைகள் தொடங்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோருகின்றனர்.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். உலக நாடுகளுக்கு இணைப்பு விமான சேவைகள், வசதியான இருக்கைகள், சூடான உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏர் இந்தியா வழங்குவதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.



கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பின் இயக்குனர் சதீஷ் இதுகுறித்து கூறும்போது, "ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் நிர்வகிக்க தொடங்கிய நாள் முதல் அந்நிறுவனத்தின் சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது" என்றார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஏர் இந்தியா சார்பில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.






மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தின் சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக சதீஷ் தெரிவித்தார். குறிப்பாக பெரும்பாலும் குறித்த நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுவது, தூய்மை, சூடான பலவகை உணவுகள் பரிமாறப்படுவது, மிகவும் வசதியான இருக்கைகள், பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமான சேவைகள் வழங்கப்படுவது உள்ளிட்டவை ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களாக உள்ளன என்று அவர் விளக்கினார்.




ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கொண்டுள்ளதால் உதாரணமாக கோவையில் இருந்து டெல்லிக்கு சென்றால் அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு இணைப்பு விமான சேவையை பெற முடியும். ஒருமுறை கோவையில் பயணிகள் தங்களது உடைமைகளை செக்இன் செய்தால் போதும், டெல்லி சென்று மீண்டும் அங்கிருந்து எந்த வெளிநாட்டுக்கு செல்கிறாரோ அந்த விமான நிலையத்தில் சென்று தனது உடமையை பெற்றுக் கொள்ளலாம்.




இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள காரணத்தால் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவைகளுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது என்று சதீஷ் தெரிவித்தார்.




கோவை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை நகரங்களுக்கு கூடுதல் விமான சேவைகளை வழங்கவும், சென்னை, பூனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கவும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




"இதுகுறித்த கோரிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் வழங்கியுள்ளோம். விரைவில் புதிய சேவைகள் தொடங்கப்படும் என நம்புகிறோம்" என்று சதீஷ் கூறினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...