கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்றும் மும்பைக்கு 4 விமானங்கள் இயங்குகின்றன. சர்வதேச இணைப்புகள், வசதியான இருக்கைகள் மற்றும் சூடான உணவு வசதிகளை காரணம் காட்டி சென்னை, பூனே உள்ளிட்ட நகரங்களுக்கு சேவைகள் தொடங்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோருகின்றனர்.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். உலக நாடுகளுக்கு இணைப்பு விமான சேவைகள், வசதியான இருக்கைகள், சூடான உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏர் இந்தியா வழங்குவதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.



கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பின் இயக்குனர் சதீஷ் இதுகுறித்து கூறும்போது, "ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் நிர்வகிக்க தொடங்கிய நாள் முதல் அந்நிறுவனத்தின் சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது" என்றார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஏர் இந்தியா சார்பில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.






மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தின் சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக சதீஷ் தெரிவித்தார். குறிப்பாக பெரும்பாலும் குறித்த நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுவது, தூய்மை, சூடான பலவகை உணவுகள் பரிமாறப்படுவது, மிகவும் வசதியான இருக்கைகள், பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமான சேவைகள் வழங்கப்படுவது உள்ளிட்டவை ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களாக உள்ளன என்று அவர் விளக்கினார்.




ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கொண்டுள்ளதால் உதாரணமாக கோவையில் இருந்து டெல்லிக்கு சென்றால் அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு இணைப்பு விமான சேவையை பெற முடியும். ஒருமுறை கோவையில் பயணிகள் தங்களது உடைமைகளை செக்இன் செய்தால் போதும், டெல்லி சென்று மீண்டும் அங்கிருந்து எந்த வெளிநாட்டுக்கு செல்கிறாரோ அந்த விமான நிலையத்தில் சென்று தனது உடமையை பெற்றுக் கொள்ளலாம்.




இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள காரணத்தால் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவைகளுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது என்று சதீஷ் தெரிவித்தார்.




கோவை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை நகரங்களுக்கு கூடுதல் விமான சேவைகளை வழங்கவும், சென்னை, பூனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கவும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




"இதுகுறித்த கோரிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் வழங்கியுள்ளோம். விரைவில் புதிய சேவைகள் தொடங்கப்படும் என நம்புகிறோம்" என்று சதீஷ் கூறினார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...