மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துள்ளார்.

Coimbatore:
கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் TR சண்முகசுந்தரம், தமது பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு பணிவான வணக்கம் தெரிவித்து, கோவை வடக்கு மாவட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Ycox7etVVUrTY8CyZJnArSfRgHuTT0xC0pgqLijd.jpg

தனது குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு பணி சுமைகள் காரணமாக, தாம் வகித்து வந்த பதவியிலிருந்தும் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
TR சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திமுக அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தவர். கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து உள்ளூர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டார்.

TQ1e4gfuf7wKvjl7Yjthen5jfYkJjv3VfAV621MD.jpg
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.
அண்மையில் 2026 தேர்தலை முன்னிட்டு, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்த சம்பவங்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.
இந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருப்பது கோவை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...