வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். கோவை-ஷொரணூர் பயணிகள் ரயில் ஏப்ரல் 12 மற்றும் 17ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


Coimbatore: பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், கோவையிலிருந்து இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, சில ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வாளையாறு பகுதியில் உள்ள ரயில் பாதையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஏப்ரல் 11 மற்றும் 14ஆம் தேதிகளில் கோவை - மங்களூரு சென்ட்ரல் நிலையம் ரயில் (எண்: 16323) 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஏப்ரல் 11, 14, 19ஆம் தேதிகளில் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் காரணமாக கோவை - ஷொரணூர் பயணிகள் ரயில் (எண்: 56603) ஏப்ரல் 12 மற்றும் 17ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சிறந்த சேவைக்காக மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் தங்களது பயண திட்டங்களை இதனை கருத்தில் கொண்டு மாற்றியமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...