வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். கோவை-ஷொரணூர் பயணிகள் ரயில் ஏப்ரல் 12 மற்றும் 17ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது என பாலக்காடு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


Coimbatore: பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், கோவையிலிருந்து இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதோடு, சில ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வாளையாறு பகுதியில் உள்ள ரயில் பாதையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஏப்ரல் 11 மற்றும் 14ஆம் தேதிகளில் கோவை - மங்களூரு சென்ட்ரல் நிலையம் ரயில் (எண்: 16323) 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஏப்ரல் 11, 14, 19ஆம் தேதிகளில் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் காரணமாக கோவை - ஷொரணூர் பயணிகள் ரயில் (எண்: 56603) ஏப்ரல் 12 மற்றும் 17ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சிறந்த சேவைக்காக மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் தங்களது பயண திட்டங்களை இதனை கருத்தில் கொண்டு மாற்றியமைத்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...