மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்களின் விலை 10% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோயம்புத்தூர் குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் (COSMAFAN) தலைவர் சிவசண்முககுமார் கூறும் போது,

சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடந்தது.

கடந்த 45 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் வார்ப்பட ( Foundry) தொழிலின் வளர்ச்சிக்காக காஸ்மாபேன் சங்கம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட குறு மற்றும் சிறு பவுண்டரிகள் உறுப்பினர்களாக உள்ளன. இத்தொழில் மூலம் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் சுமார் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது.

கடந்த சில மாதங்களாக பவுண்டரி தொழிலுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருட்களின் விலை 20 சதவீதம் வரையிலும், இதர துணைப் பொருட்களின் (Allied Materials) விலை 20% முதல் 40% வரையிலும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தச் சீரற்ற விலை ஏற்றத்தினால் சிறு மற்றும் குறு பவுண்டரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, பவுண்டரிகளில் உற்பத்தி செய்யப்படும் 'காஸ்டிங்' (Casting) பொருட்களின் விலையை, தற்போதுள்ள விலையிலிருந்து 10% உயர்த்துவது எனச் சங்கம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.

பவுண்டரி தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலப்பொருட்கள் மற்றும் துணைப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசூர் மற்றும் மாணிக்கம்பாளையம் பவுண்டரி கிளஸ்டர்களில் அரசு சார்பில் 'மூலப்பொருள் வங்கி' (Raw Material Bank) அமைத்துத் தர வேண்டும். குறு பவுண்டரிகளுக்கான ஜிஎஸ்டி (GST) வரியை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், பவுண்டரி தொழிலையும் பாதுகாக்க முடியும்.

என்றார்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...