சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்குச் சேகரிப்பு மேற்கொண்டார். குழந்தைக்கு துதித்ரா என பெயரிட்டு மக்களிடம் நெருக்கம் ஏற்படுத்தினார்.


Coimbatore: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram சிங்காநல்லூர் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நந்தா நகர், திருக்குமரன் நகர் எக்ஸ்டென்ஷன், திருக்குமரன் நகர், SRD லேஅவுட், டெக்ஸ்டைல் லேஅவுட் போன்ற பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.






வாக்குச் சேகரிப்பின்போது AIADMK அரசின் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் விரிவாக எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பகுதி மக்கள் வேட்பாளர் K R Jayaram-க்கு மேள தாளங்கள் முழங்க பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.




சிறப்பு அம்சமாக MGR வேடமனிந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த K R Jayaram மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தார். இதன்மூலம் தமிழக மக்களின் அன்பிற்குரிய தலைவர் MGR-ன் நினைவை மீட்டெடுத்து மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்தார்.




அப்பகுதியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு பெயர் சூட்ட வேட்பாளரிடம் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்று K R Jayaram குழந்தைக்கு 'துதித்ரா' என பெயரிட்டு ஆசி வழங்கினார். இந்த செயல் மக்களிடம் அவருக்கான நெருக்கத்தை மேலும் அதிகரித்தது.




வாக்குச் சேகரிப்பு பணியில் பகுதி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர்கள் சசிகுமார், சந்திரசேகர், தேசிய ஜனநாயக கூட்டணியின் BJP, AMMK, PMK கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், AIADMK நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்குச் சேகரிப்பில் பங்கேற்றனர்.




தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளரின் பல்வேறு முயற்சிகள் கட்சிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...