சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜய் குறித்து பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது வைரலாக வருகிறது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில் தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வாரச்சந்தை காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டினார்.



அப்போது அங்கிருந்த ஒரு காய்கறி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்மணி மற்றும் இரண்டு இளம்பெண்களிடம் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தங்களது தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து, அந்த பெண்கள் வேட்பாளரிடம் பல கேள்விகளை எழுப்பினர். “உங்கள் தலைவர் விஜய் தனது சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை எனச் செய்திகள் வெளியாகின்றன. அப்படியானவர் பொதுமக்களை எப்படி கவனிப்பார்?” என்றும், “உங்கள் கட்சியில் இளம் நிர்வாகிகள் மூத்தவர்களை மரியாதையற்ற முறையில் பேசுவது ஏன்? இதை உங்கள் தலைவர் ஏன் கண்டிக்கவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினர்.



இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வேட்பாளர் தயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றபோதும், “ஆதாரத்துடன் பதில் சொல்ல வேண்டும்” என பெண்கள் வலியுறுத்தினர்.

இதனால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் கூடத் தொடங்கிய நிலையில், வேட்பாளர், தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த சம்பவம் அங்கு இருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...