உதகை மலை ரயில் தடத்தில் சரிந்த மண்ணை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்

குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், நீலகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.



இதில், உதகை மலை ரயில் தடத்திலும் மண்சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ரயில்வேத்துறை அதிகாரிகள் உதகை ரயில் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை பொக்லைன் மூலம் அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே, சீரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் தண்டவாளத்தில் விழுந்த மரத்தில் மோதிய சரக்கு ரயிலால் இருவர் காயம் அடைந்தனர்.



இந்த நிலையில் மலை ரயில் இயக்கப்படாததால் முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது, பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருவதால் நாளை முதல் மலை ரயில் சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...