கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை, மகாராஷ்டிரா காவல்துறை மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


Coimbatore: வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி வாக்குப்பதிவு செய்யும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடிஅணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.



எல்லை பாதுகாப்பு படையினர், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 300க்கும் மேற்பட்டோர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.



பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஸ்தூரிபாளையத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பை ஏ.எஸ்.பி. செல்வி இன்பா மற்றும் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



யுனைடெட் கல்லூரி மற்றும் ஏ.வி.பி. பள்ளி பேண்டு வாத்திய மாணவர்கள் இசையுடன் தொடங்கிய இந்த அணிவகுப்பு, ஐந்து முக்கு, அகிலா பேக்கரி, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம், பெரியநாயக்கன்பாளையம் ஜங்ஷன் வழியாகச் சென்று கே.ஆர். மருத்துவமனையில் நிறைவடைந்தது.



இந்த அணிவகுப்பில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், எல்லை பாதுகாப்பு படையினர், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...