கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை, மகாராஷ்டிரா காவல்துறை மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


Coimbatore: வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி வாக்குப்பதிவு செய்யும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடிஅணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.



எல்லை பாதுகாப்பு படையினர், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 300க்கும் மேற்பட்டோர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.



பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஸ்தூரிபாளையத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பை ஏ.எஸ்.பி. செல்வி இன்பா மற்றும் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



யுனைடெட் கல்லூரி மற்றும் ஏ.வி.பி. பள்ளி பேண்டு வாத்திய மாணவர்கள் இசையுடன் தொடங்கிய இந்த அணிவகுப்பு, ஐந்து முக்கு, அகிலா பேக்கரி, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம், பெரியநாயக்கன்பாளையம் ஜங்ஷன் வழியாகச் சென்று கே.ஆர். மருத்துவமனையில் நிறைவடைந்தது.



இந்த அணிவகுப்பில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா, பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், எல்லை பாதுகாப்பு படையினர், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...