திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார்.


Tiruppur: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சி சண்முகவேலு குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று எரிசனம்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் ஊடகவியலாளர்களிடம் பேசினார்.






தற்போதைய திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கற்பழிப்பு, படுகொலை போன்றவை அதிகரித்துள்ளதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். "திமுகவில் கிளை அளவில் இருந்து மேல்மட்டம் வரை மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகின்றனர். திமுக வேட்பாளர்களை மூன்று பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர் - ஸ்டாலின், உதயநிதி, சபரீஸ்வரன். இவர்களை திருப்திப்படுத்தினால் தான் பொறுப்பும் சீட்டும் கிடைக்கும். ஜனநாயகம் இல்லாத கட்சி திமுக," என்று அவர் தெரிவித்தார்.






திடீரென உதயநிதி துணை முதல்வர் ஆனது போல், இன்ப நிதியை அடுத்த தேர்தலில் எம்எல்ஏவாக கூட ஆக்குவார்கள் என்று அண்ணாமலை கூறினார். "மாற்றம் வேண்டும் என்றால் எல்லாம் மாற வேண்டும். திமுகவில் தவறான நபர்கள் அதிக அளவில் உள்ளனர். கட்சியும் மோசம், ஆட்சியும் மோசம்," என்று அவர் விமர்சித்தார்.






மே 4ஆம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்பார் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக-பாஜக கூட்டணி இணைந்து தமிழகத்திற்கு சிறப்பான ஆட்சியை அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.






அதன் பின்பு அப்பர் அமராவதி அணை திட்டம், ஆனைமலை நல்லாறு திட்டம் போன்ற மேம்பாட்டு திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று அண்ணாமலை தெரிவித்தார். "இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசோடு மாநில அரசு இணைந்து பணியாற்ற வேண்டும். அது அப்போதுதான் சாத்தியமாகும்," என்று அவர் வலியுறுத்தினார்.






AMMK வேட்பாளர் சி சண்முகவேலுவிற்கு ஆதரவாக எரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக தொண்டர்களும், அண்ணாமலையும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...