குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பின்போது குழந்தைகளுடன் இணைந்து சிலம்பம் சுழற்றி வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். அவருக்கு AIADMK சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவரது தேர்தல் பிரசார பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.





அதன் தொடர்ச்சியாக இன்று குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அவர், அந்த பகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு சிலம்பம் சுழற்றி AIADMK சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.





வரவேற்பின்போது குழந்தைகளுடன் இணைந்து அவரும் சிலம்பம் சுழற்றி வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். தமிழ் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எஸ்.பி.வேலுமணி, வாக்காளர்களின் ஆதரவை திரட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...