குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பின்போது குழந்தைகளுடன் இணைந்து சிலம்பம் சுழற்றி வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். அவருக்கு AIADMK சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவரது தேர்தல் பிரசார பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.





அதன் தொடர்ச்சியாக இன்று குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அவர், அந்த பகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு சிலம்பம் சுழற்றி AIADMK சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.





வரவேற்பின்போது குழந்தைகளுடன் இணைந்து அவரும் சிலம்பம் சுழற்றி வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். தமிழ் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எஸ்.பி.வேலுமணி, வாக்காளர்களின் ஆதரவை திரட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...