சிங்காநல்லூரில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்

சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள கொடிசியா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஏப்ரல் 15ம் தேதி வேனில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்தனர். வேன் ஓட்டுநர் அதிவீரபாண்டியன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.


Coimbatore: சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள கொடிசியா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.




தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாமிநாதன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் ஜில்லி கிரிஸ்டி உள்ளிட்ட அதிகாரிகள் ஏப்ரல் 15ம் தேதி மாலை கொடிசியா பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அதில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருப்பதை கண்டறிந்தனர்.




வேனை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவர் அதிவீரபாண்டியன் என்பதும், நகைகளை தனியார் நிறுவனத்துக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை அரசு கருவூலத்துக்கு அனுப்பி வைத்தனர்.




பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 18 லட்சத்து 21 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.




இதேபோல், Coimbatore மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை வரை அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ.22.86 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...