துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: துடியலூர் அரவான் திடல் பகுதியில், மத்திய அரசின் அஞ்சலகம் எதிரில் திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.



பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், மசோதா நகல்களை எரித்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.



இதில், துடியலூர் திமுக அலுவலகத்தில் இருந்து கருப்பு உடையணிந்து, கைகளில் கருப்புக்கொடி ஏந்தியவாறு மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர் அரவான் திடல் பகுதியில் உள்ள மத்திய அரசின் அஞ்சலகம் முன்பு திரண்டு, மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து, மசோதா நகலை தீயிட்டு எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



வட்டக் கழக செயலாளர்கள் தமிழ்நிதி மற்றும் இமயவரம்பன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தோழர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...