ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். 24 திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு வாக்கு கோரினார். ஒப்புட்டு சாப்பிட்டு சாமானிய மக்களுடன் கலந்துரையாடினார்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் AIADMK வேட்பாளராக K.R. Jayaram போட்டியிடுகிறார். தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இவருக்கு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.




AIADMK பொதுச்செயலாளர் Edappadi Palaniswami மற்றும் BJP மாநிலத் தலைவர் Annamalai ஆகியோர் K.R. Jayaramஐ ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட நிலையில், நேற்று வேட்பாளர் ஆவாரம்பாளையம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.




ஆவாரம்பாளையம் காய்கறி சந்தைக்கு சென்ற K.R. Jayaram, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தான் இந்த தொகுதிக்கு வைத்துள்ள 24 திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், ஒரு தேங்காய் கடையில் அமர்ந்து கடைக்காரருடன் இணைந்து தேங்காய் விற்பனையில் ஈடுபட்டார். அங்கு வந்த மக்களிடம் நேரடியாக பேசி ஆதரவு திரட்டினார்.




பின்னர் சந்தையில் உள்ள ஒரு கடையில் ஒப்புட்டு வாங்கி சாப்பிட்டு, காய்கறி சந்தைக்கு வந்த மக்களிடம் ஆதரவு திரட்டினார். சிங்காநல்லூர் MLA K.R. Jayaramஇன் இந்த செயல் சந்தையில் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.




சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட K.R. Jayaram பேசும்போது, "சிங்காநல்லூர் தொகுதியில் நான் MLAஆக இருந்தபோது எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன். தற்போது மீண்டும் வெற்றி பெற்று MLAஆனதும், இந்த தொகுதிக்கு நிறைவேற்றுவதற்கு என்று 24 திட்டங்களை வைத்துள்ளேன்" என்றார்.




"MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், நான் வைத்துள்ள அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து நிறைவேற்றி, சிங்காநல்லூரை சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்" என்று வாக்குறுதி அளித்தார். வேட்பாளரின் இந்த எளிமையான அணுகுமுறை வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...