திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, காங்கேயம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார்.
கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, காங்கேயம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வாக்கு சேகரித்தார்.

அப்போது, காங்கேயம் தொகுதியில் எம்.பி சாமிநாதன் மற்றும் தாராபுரம் தொகுதியில் மருத்துவர் இந்திராணி ஆகியோர் வெற்றி பெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

பரப்புரையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காங்கேயம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வட்டமலைக்கரை அணைக்கு ரூ.15 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம், ரூ.6 கோடி மதிப்பிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிவன்மலைக்கு சாலை வசதி, காங்கேயம் காளை சிலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை, மாணவர்களுக்கு மடிக்கணினி, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளதாகவும், அடுத்த கட்டமாக மகளிர் உரிமைத்தொகை ரூ.2000, கல்வி ஊக்கத்தொகை, முதியோர் உதவித்தொகை உயர்வு, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அவர், “எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை. அந்த அனுபவம் எனக்கு தேவையுமில்லை” என பதிலடி கொடுத்தார்.
மேலும், “இந்த தேர்தல் தமிழ்நாடு Vs டெல்லி என்ற நிலைமையில் உள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து டெல்லி புறக்கணிக்கிறது. அதற்கு மக்கள் தேர்தலில் சரியான பதில் அளிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
அப்போது, காங்கேயம் தொகுதியில் எம்.பி சாமிநாதன் மற்றும் தாராபுரம் தொகுதியில் மருத்துவர் இந்திராணி ஆகியோர் வெற்றி பெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பரப்புரையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காங்கேயம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வட்டமலைக்கரை அணைக்கு ரூ.15 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம், ரூ.6 கோடி மதிப்பிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிவன்மலைக்கு சாலை வசதி, காங்கேயம் காளை சிலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை, மாணவர்களுக்கு மடிக்கணினி, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளதாகவும், அடுத்த கட்டமாக மகளிர் உரிமைத்தொகை ரூ.2000, கல்வி ஊக்கத்தொகை, முதியோர் உதவித்தொகை உயர்வு, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அவர், “எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை. அந்த அனுபவம் எனக்கு தேவையுமில்லை” என பதிலடி கொடுத்தார்.
மேலும், “இந்த தேர்தல் தமிழ்நாடு Vs டெல்லி என்ற நிலைமையில் உள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து டெல்லி புறக்கணிக்கிறது. அதற்கு மக்கள் தேர்தலில் சரியான பதில் அளிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.