தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


Coimbatore: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கொங்கு மண்டலத்தில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.



அதன்படி, திமுக சார்பில் உடுமலை தொகுதியில் போட்டியிடும் ஜெயகுமார், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் நித்தியானந்தன், வால்பாறை தொகுதியில் போட்டியிடும் சுதாகர் ஆகியோருக்கு ஆதரவாக, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் இடையிலான போட்டி என்றும், இதில் தமிழ்நாடு அணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.



மேலும், தமிழக மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.5,000 தொகையை வங்கி கணக்குகளில் வரவு வைத்ததாகவும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவிற்கு முழுமையாக அடிமையாக மாறிவிட்டார் என்றும், “பத்து தோல்வி பழனிச்சாமி” என்று அழைக்கப்படுபவர், இந்த தேர்தலுக்கு பிறகு “மொத்த தோல்வி பழனிச்சாமி” ஆக மாறுவார் என்றும் விமர்சித்தார்.



தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்கள் கிடைக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...