கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதே முக்கியம் என கூறி மக்களிடம் ஆதரவு கோரினார்.
Coimbatore: கொங்கு பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று மாலை கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி மற்றும் செந்தமிழ் செல்வன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பொதுமக்களிடம் பேசிய அவர், தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் ஒருமுறை மட்டுமே பிரச்சாரத்திற்கு சென்றதாகவும், கோவை தெற்கு மற்றும் வடக்கு வேட்பாளர்களின் வெற்றியே தற்போது முக்கியம் என்பதற்காகவே கோவைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சேப்பாக்கத்தில் தாம் வெற்றி பெறுவதை விட கோவை தெற்கு, வடக்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதே முக்கியம் என்றும் கூறினார். கடந்த முறை இந்த தொகுதிகளில் திமுக தோல்வியடைந்த நிலையில், இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அப்போது கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி மற்றும் செந்தமிழ் செல்வன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பொதுமக்களிடம் பேசிய அவர், தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் ஒருமுறை மட்டுமே பிரச்சாரத்திற்கு சென்றதாகவும், கோவை தெற்கு மற்றும் வடக்கு வேட்பாளர்களின் வெற்றியே தற்போது முக்கியம் என்பதற்காகவே கோவைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சேப்பாக்கத்தில் தாம் வெற்றி பெறுவதை விட கோவை தெற்கு, வடக்கு தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதே முக்கியம் என்றும் கூறினார். கடந்த முறை இந்த தொகுதிகளில் திமுக தோல்வியடைந்த நிலையில், இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.